மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் மறைந்த தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு நாடு முழுவதும் நினைவேந்தல் கூட்டம் மூலமாக அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவிலும் ஞாயிறன்று சீத்தாராம் யெச்சூரிக்கு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. சிபிஎம் உத்தரப்பிரதேச மாநிலச் செயலாளர் டி.பி.சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி, மத்தியக் குழு உறுப்பினர் விக்ரம் சிங் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் மாநில அளவிலான தலைவர்கள் அஞ்சலி உரையாற்றி தோழர் சீத்தாராம் யெச்சூரியை நினைவு கூர்ந்தனர்.